குடல் – உஷ்ண பேதி
01. உலர்ந்த மாம்பூவுடன் சீரகம் சேர்த்துப் பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உஷ்ண பேதி குணமாகும். (696)
குடல் – கழிச்சல்
01. உப்பிலாங்கொடி இலையைப் பசு நெய் இட்டு ஐந்தாறு நாட்கள் வெயிலில் வைத்திருந்து, வடிகட்டி, ஓரிரு துளிகள் குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் கழிச்சல் நீங்கும்.(208)
02. பேய்மிரட்டி இலைச் சாறு எடுத்து ஐந்து துளி வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் பேதி தீரும். பல் முளைக்கும் போது ஏற்படும் கழிச்சல் குணமாகும்.(263)
03. மாம்பருப்பு, மாதுளம்பூ, ஓமம் ஆகியவை சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து கொடுத்தால் கழிச்சல் குணமாகும்.(698)
குடல் – பேதி
01. உடல் சூட்டு பேதி குணமாக வில்வ மரத்தின் வேரைக் கழுவி, சுத்தம் செய்து, காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து , அந்தத் தூளில் இரண்டு சிட்டிகை எடுத்து, தேன் விட்டுக் குழைத்துச் சாப்பிட்டு வர பேதி குணமாகும். (102)
02. மாங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து பசும் பாலுடன் கலந்து மைய அரைத்து சாப்பிட்டு, தண்ணீர் குடித்தால் பீச்சி அடிக்கும் பேதி உடனே நிற்கும். (104)
குடல் கோளாறுகள்
01.
சீரகத்துடன்
மூன்று பற்கள் பூண்டு வைத்து அரைத்து, எலுமிச்சைச் சாற்றில்
கலந்து குடித்து வந்தால், குடல் கோளாறுகள் விலகும்.
குடல் வாயு
01. கொய்யா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து மென்று தின்றால் குடல் வாயு தீரும்(1316)
குடல் – வலுவடைய
01. வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் வலுவடையும். (544) (649) (712)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )20]
{03-06-2021}
==========================================================