மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “க” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “க” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜூன், 2021

குடல் - பிற வகைத் தொந்தரவுகள் (Other problems)

              குடல்உஷ்ண பேதி

01.   உலர்ந்த மாம்பூவுடன் சீரகம் சேர்த்துப் பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உஷ்ண பேதி குணமாகும். (696)

               குடல்கழிச்சல்

01.   உப்பிலாங்கொடி இலையைப் பசு நெய் இட்டு ஐந்தாறு நாட்கள் வெயிலில் வைத்திருந்து, வடிகட்டி, ஓரிரு துளிகள் குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் கழிச்சல் நீங்கும்.(208)

 

02.   பேய்மிரட்டி இலைச் சாறு எடுத்து ஐந்து துளி வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் பேதி தீரும். பல் முளைக்கும் போது ஏற்படும் கழிச்சல் குணமாகும்.(263)

 

03.   மாம்பருப்பு, மாதுளம்பூ, ஓமம் ஆகியவை சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து கொடுத்தால் கழிச்சல் குணமாகும்.(698)

                குடல்பேதி

 

01.   உடல் சூட்டு பேதி குணமாக வில்வ மரத்தின் வேரைக் கழுவி, சுத்தம் செய்து, காய வைத்து இடித்து  தூள் செய்து சலித்து , அந்தத் தூளில் இரண்டு சிட்டிகை எடுத்து, தேன் விட்டுக் குழைத்துச் சாப்பிட்டு வர பேதி குணமாகும். (102)

 

02.   மாங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து பசும் பாலுடன் கலந்து மைய அரைத்து சாப்பிட்டு, தண்ணீர் குடித்தால் பீச்சி அடிக்கும் பேதி உடனே நிற்கும். (104) 

        குடல் கோளாறுகள்

01.   சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து அரைத்து, எலுமிச்சைச் சாற்றில் கலந்து குடித்து வந்தால், குடல் கோளாறுகள் விலகும்.

        குடல் வாயு

01.   கொய்யா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து மென்று தின்றால் குடல் வாயு தீரும்(1316)

                 குடல்வலுவடைய

01.   வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் வலுவடையும். (544) (649) (712)

 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )20]

{03-06-2021}

 

==========================================================


 

 

 


குடல் - இரத்த பேதி (Dysentery)

 

01.   அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு எடுத்துப் பொடி செய்து மூன்று சிட்டிகை அளவு பாலில் கலந்து உட்கொள்ள இரத்தபேதி குணமாகும்.(091)

 

02.   கான வாழையின் வேர், தண்டு இலை இவைகளுடன்அறுகம்புல் சம அளவு எடுத்து மைய அரைத்து,கொட்டைப் பாக்கு அளவு பாலில் கலந்து கொடுத்தால் இரத்த பேதி தீரும் (092)

 

03.   பிண்ணாக்குக் கீரையைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்து நெய்யுடன் சோற்றில் கலந்து சாப்பிட்டு வர, சீத பேதி, இரத்த பேதி ஆகியவை குணமாகும்.(093)

 

04.   பழம் பாசி இலையைப் பாலில் வேகவைத்து  வடிகட்டி, எலுமிச்சம் பழச் சாறு கலந்து கொடுத்தால் இரத்தக் கழிச்சல் குணமாகும்.(564)


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )20]

{03-06-2021}

==========================================================


 

 

குடல் - பூச்சிகள் சில வகை.

         குடல் திமிர்ப்பூச்சி

01.    கொன்றை இலைக் கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் 100 மி.லி .எடுத்து சர்க்கரை சேர்த்து உட்கொள்ள திமிர்ப்பூச்சி மலத்துடன் வெளியேறும்.

 

         குடல் நாக்குப்பூச்சி

01.   வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் வெளியேறும். (345) (647)

 

                    குடல்பூச்சி நீங்க

01.   சுண்டைக் காய் வற்றல், ஓமம் இரண்டையும் சம அளவு எடுத்து, பொடித்து, இரண்டு கிராம் வீதம்காலை வேளை தினமும் சாப்பிட்டால் குடல் பூச்சிகள் அழியும்.

 

02.   மாங்கொட்டைப் பருப்பைக் காயவைத்துப் பொடியாக்கி  ஒரு சிட்டிகை தேனில் குழைத்து 2 வேளை கொடுத்தால் குடல் பூச்சிகள் அகலும். (655)

 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )20]

{03-06-2021}

 

==========================================================