01. எட்டி இலையை
மை போல்
அரைத்து சிறு
சிறு வில்லைகளாகத்
தட்டி பௌத்திர இடத்தில்
கட்டி வந்தால்
பூச்சிகள் தானாக
வெளிப்பட்டு மடிந்து
விடும்.(1007)
02. தும்பை வேர்,
வேளை இலை,
வெங்காயம் சேர்த்து
அரைத்துக் கட்டி
வந்தால், பௌத்திரம் குணமாகும்.(372)
03. பொடுதலையுடன் உளுத்தம் பருப்பும் சேர்த்து நெய்யில் வதக்கி, துவையல் செய்து பகல் உணவாகச் சாப்பிட்டு வந்தால் உள்மூலம், பௌத்திரம் ஆகியவை தீரும். (1505)
04. தும்பை வேர், வேளை இலை, வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துக் கட்டினால் மூலம், பௌத்திரம் குணமாகும். (372)
05. வேளை
(நல்ல வேளை) இலை, தும்பை வேர், வெங்காயம் சேர்த்து அரைத்துக் கட்டி வந்தால் மூலம், பௌத்திரம் குணமாகும். (372)
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,கடகம் (ஆடி )16]
{01-08-2021}
==========================================================