மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “வ”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “வ”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

வெண்படை (மெலனின் குறைபாடு) (Lucoderma)

வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.

 

மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.

 

 

வெண்படைக்கு எளிய மருந்து

********************************

 

* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்

* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்

 

இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.

 

பிறகு அதை வடிகட்டி, இத்துடன்

* வெந்தயப் பொடி- 80 கிராம்

 

கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

 

இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.

 

மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.

 

முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.

 

 

மேல்பூச்சுக்கான மருந்து

**************************

1.அவுரிச்செடி

2.குன்றிமணி

 

குன்றிமணி விதைகளை 50 கிராம் அளவு எடுத்து, ஊறவைத்து அதன் மேல் தோலை உரித்து எடுத்துவிடவேண்டும். நமக்கு தேவையானது அதன் பருப்புகள் மட்டுமே. அந்த பருப்புகளை 200 மி.லி அவுரி இலைச்சாறு விட்டு அரைக்க வேண்டும். அந்த விழுதை, குச்சி அல்லது பென்சில் போல நீளமாக உருட்டி காய வைக்க வேண்டும். கல்லில், சிறிது நீர் விட்டுஅதில் அந்த காய்ந்த மருந்து குச்சியை அரைத்தெடுத்து, வெண்படை உள்ள பகுதிகளில் பூசி வந்தால் குணம் பெறலாம்.

 

அவுரிச் செடி கிடைக்கவில்லையெனில் நாட்டுமருந்துக் கடையில் அவுரி இலைப்பொடி கிடைக்கும். அதை 100 கிராம் வாங்கி ஒரு லிட்டர் நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, 200 மி.லி.யாக சுண்டவைக்கவும். பின் அந்த சுண்டிய நீரில் குன்றிமணி பருப்புகளை அரைத்து, அந்த விழுதை குச்சி போல உருட்டி காய வைக்கவும். பின் அதை கொஞ்சம் நீர் விட்டு இழைத்து வெண்படை உள்ள இடங்களில் பூசவும்.

 

வாய் உள்ளே வெண்படை இருக்குமானால், உதாரணமாக கீழ் உதட்டின் உள்புறத்தில் வெண்படை இருக்குமானால், இந்த பூச்சை உள்ளே போடக்கூடாது. மாறாக கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் பூசிவிட்டால் போதுமானது. இந்த பூச்சு வாயில் படுவதை தவிர்க்கவும்.

 

 

2. வெண்படை தீர இன்னுமொரு மருந்து

******************************************

 

தேவையானவை:

1. கார்போக அரிசி-200கிராம்

2. இஞ்சிச்சாறு-50கிராம்

3. மஞ்சள் கரிசாலைச் சாறு-50கிராம்

 

 

இஞ்சிச்சாறு, கரிசாலைச்சாறு ஆகிய இவ்விரண்டு சாறுகளை ஒன்றாகக் கலந்து, அதில் கார்போக அரிசியை ஊறவைக்கவும். கார்போக அரிசியின் மேல்தோல் கழலும் அளவுக்கு ஊறவைக்கவும்.

 

அந்த அளவுக்கு ஊறிய பின் நன்றாக பிசறினால், மேல்தோல் தனியாக வந்துவிடும். மேல்தோல் நீக்கப்பட்ட கார்போக அரிசியை மட்டும் தனியே எடுத்து, அதில் இஞ்சிச்சாறு, மஞ்சள் கரிசாலைச் சாறு விட்டு மைபோல அரைத்து, மிளகளவு இருக்கும்படியாக, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

 

காலை, மாலை என இரு வேளையும், வேளைக்கு ஒரு மாத்திரையாக,

உணவுக்கு முன் உண்டுவர வெண்புள்ளிப் படலம் பூரணமாக குணமாகும்.

 

மருந்து உண்ணும் போது பத்தியமாக காபி, அகத்திக்கீரை, சிறுகீரை, சுண்டக்காய், பாகற்காய் மற்றும் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

==========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  


வெண்புள்ளிகள் (Lucoderma)

 

01.  அவரிவேர்ப் பட்டையை வெந்நீர் விட்டு அரைத்து சுண்டைக் காயளவு உள்ளுக்கும் சாப்பிட்டு, மீதமுள்ளதை வெண்புள்ளிகள் மீதும் தடவி வந்தால், 20 – 100 நாட்களில் வெண்புள்ளிகள் தீரும்.

 

02.  ஈஸ்வரமூலி வேரைத் தேனில் அரைத்து ஒரு கிராம் அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள் குணமாகும்.(563)

 

03.  கண்டங்கத்தரிப் பழத்தை குழைய வேக வைத்துக் கடைந்து வடிகட்டி எடுத்த அளவுக்கு 5-க்கு ஒன்று எள் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கடுகு திரள வடித்து வைத்துக் கொண்டு வெண் புள்ளிகள்  மீது பூசி வர, வெண்மை மறைந்து உடல் நிறமடையும்.

 

04.  கண்டங்கத்தரிப் பழத்தை வேகவைத்து நன்றாக மசித்து வடிகட்டி, அதனுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சி உடலில் தடவி வந்தால் வெண்புள்ளிகள் மறையும்.

 

05.  கார்போகரிசி  விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை இருதய சம்பந்தமான நோய்களுக்கும் யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்ட சம்பந்தமான வியாதியை சீர் செய்யவும், தோல் வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண் குஷ்டம், குஷ்டம், "AIDS" க்கும் நல்ல மருந்தாகப்  பயன்படுகிறது. 

 

06.  குன்றிமணி இலைச்  சாறுடன் வெண்கொடி வேலன் வேரும் சேர்த்து  அரைத்து அதனை வெண்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை மறையும்.(774) (1010)

 

07.  கொன்றை வேர்ப் பட்டை, கொன்றை மரப் பட்டை, வில்வப் பழ ஓடு ஆகியவற்றின்   சூரணம் சமனளவு கலந்து   அரைத் தேக்கரண்டி எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, ஓரிரு மண்டலத்தில் வெண்மேகம் தீரும். தேங்காய் எண்ணெயில் கலந்து வெண்புள்ளிகள் மீதும் பூசலாம்.

 

08.  சந்தனக் கட்டையை  எலுமிச்சம் பழச் சாற்றில் உரைத்துப் பூசிவந்தால், வெண்புள்ளிகள் தீரும்.

 

09.  துத்தி விதைகளைப் பொடி செய்து சம அளவு கற்கண்டுப் பொடி கலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்து உண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குணமாகும்.

 

10.  துத்தி விதைச் சூரணம் ஐந்து கிராம், கற்கண்டுப் பொடி ஐந்து  கிராம், தேனில் கலந்து உட்கொண்டு வந்தால், வெண்புள்ளிகள்  தீரும்.

 

11.  நிலப்பனைக் கிழங்கின் மேல் தோலையும் உள் நரம்பையும் போக்கி, உலர்த்திப் பொடித்து 5 கிராம் பொடியுடன் சர்க்கரை கூட்டிப் பாலுடன் கலந்து, காலை மாலை உட்கொள்ள வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.

 

12.  பூவரசு மரத்தின் முதிர்ந்த பட்டையின் சதையைச் சிதைத்துப் பிழிந்த சாற்றை வாயிலிட்டுக் கொப்பளித்துக் கொண்டே விழுங்கிவிடின் கழிச்சலை உண்டாக்கும். இவ்வாறே  பல நாட்கள்  செய்து வந்தால், உதட்டில் வரும் வெண்புள்ளி (வெண்குட்டம்) போகும்.

 

13.  பெருமருந்து (ஈஸ்வரமூலி) உலர்ந்த வேர் ஒரு கிராம் எடுத்து தேனில் உரைத்துக் கொடுத்துவர வெண்புள்ளிகள்  தீரும். (563)

 

14.  மருதோன்றி வேர்ப்பட்டையைப் பாலில் அரைத்துப் புள்ளிகள் இருக்குமிடத்தில் பற்றுப் போட்டு வந்தால், வெண்புள்ளிகள் தீரும்.

 

15.  வில்வக் காயைச் சில துளி வெந்நீர் விட்டுச் சந்தனக் கல்லில் உரைத்து (தேய்த்து) வழித்து எடுத்து வெண்புள்ளிகள் மீது இரவில் மட்டும் தொடர்ந்து 120 நட்கள் போட்டு வந்தால் வெண்புள்ளிகள் தீரும்.

 

16.  விழுதித் தைலம் பத்து துளி, பாலில் கலந்து, இரவில் மட்டும் நீண்ட நாள் சாப்பிட்டு வந்தால், வெண்மேகம் எனப்படும் வெண்புள்ளிகள்  தீரும்.

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

==========================================================================