01. இலந்தை இலை ஒரு பிடி, மிளகு ஆறு, பூண்டுப் பல் நான்கு எடுத்து ஒன்றாக அரைத்து மாத விலக்கான முதல் இரண்டு நாட்கள் கொடுத்து வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கும். புத்திரப் பேறு உண்டாகும்.
(615)
02. கற்றாழைச் சோற்றுடன் நெய் சேர்த்துக் காய்ச்சி ஒன்றிரண்டு தேக்கரண்டி அருந்த கருப்பைக் கோளாறுகள் தீரும்.
03. பருத்தி இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கும்.(595)
04. மாதுளை வேரின் பட்டை, மாதுளை மரத்தின் பட்டை, மாதுளை விதை ஆகியவை சம அளவு எடுத்துப் பொடிசெய்து வேளைக்கு மூன்று கிராம் வீதம் காலை மாலை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கும்.(603)
05. வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்துப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கும். (588)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================