01.
கீழாநெல்லி கைப்பிடி அளவு எடுத்து சிறிதளவு சீரகம் சேர்த்து மைய அரைத்து, எலுமிச்சைச் சாற்றில்
கலந்து பருகினால், கல்லீரல் கோளாறு காணாமல் போகும்.
02.
நிலவேம்பு இலைச் சாற்றை அரைத் தம்ளர் வீதம் காலை மாலை இரு வேளைகள் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
03. பாகற்காய் வற்றலை வறுத்து உட்கொண்டு வந்தால் மஞ்சள் காமாலை, கல்லீரல் குறைபாடுகள் நீங்கும். (1415)
04.
வெந்தய இலை மற்றும் விதை மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் சேதத்திற்கு பெரிதும் உதவும்.
05.
வெந்தயத்தை சிறிதளவு எலுமிச்சம் பழச் சாற்றுடன் சேர்த்து அரைத்து காலை மாலை அருந்தி வந்தால் கல்லீரல் பிரச்சினைகள் கட்டுப்படும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================