மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

காது - அடைப்பு

 

01.   தூதுவேளை இலைச் சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வந்தால் காது அடைப்பு நீங்கும் (056)

 

02.   தூதுவேளையைச் சமைத்து உண்பதால் காது அடைப்பு விலகும். மூச்சு வாங்குதல், காது மந்தம் விலகும்.(080)

 

03.   தூதுவேளை இலையைப் பிழிந்து காதில்விட, காதடைப்பு, காதெழுச்சி போகும். துவையல், குழம்பு செய்து உண்ண கோழைக் கட்டு அறும்.

 

04.   தூதுவேளைச் சாறு இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது அடைப்பு நீங்கும். காதுக்குள் கட்டிகள் ஏதும் இருந்தாலும் குணமாகும்.  (056) (1134)

 

05.   தூது வேளைக் கீரையை உண்பதால் மூச்சு வாங்குதல், காது அடைத்தல், காது மந்தம் ஆகியவை விலகும்.  (080) (117) (1295) (1786)

 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

 

==========================================================