01. கொடிவேலி வேர்ப் பட்டையை எடுத்து வந்து சற்று நீர் விட்டு அரைத்து ஒரு கோலிக் குண்டு அளவுக்கு எடுத்து பாலில் கரைத்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைப் பிடிப்பு நீங்கும்.(1551) பழைய சுரம் குணமாகும் (1665) அரையாப்புக் கட்டி குணமாகும் (1670)
கருப்பை நோய்கள் தீரும் (1743)
02.
செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து
தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில்
உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
03.
செர்ரிப்
பழம் கருப்பை நோய்களுக்குச் சிறந்தது (1218)
(1238)
04. வெள்ளறுகு சமூலத்தை அரைத்து மாதவிடாய் ஆகும் மூன்று நாட்களும் 2 கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால் கருப்பைப் புழு நீங்கும்.
(1602)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================