மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

காது - வலி (Ear-ache)

 

01.  ஊமத்தம் பூவைப் பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி தீரும்.(053)

 

02.  ஊமத்தை இலைச்சாற்றுடன் சமனளவு  நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இளஞ் சூட்டில் 2 - 3  துளி காதில் விடச் சீதளத்தால் வந்த காது வலி தீரும்.

 

03.  எருக்கங் காயினைக் கசக்கி அதிலிருந்து வரும் சாறினை இரண்டு சொட்டுகள் காதில் விட்டால், காது வலி நீங்கும்.(057)

 

04.  எருக்கம் பூ மொட்டை (மலராத மொட்டு) எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி அதிலிருந்து வரும் சாறில் இரண்டு மூன்று துளிகளைக் காதில் விட்டால், காது வலி சரியாகும். (066)

 

05.  எலுமிச்சம் பழச் சாற்றினை ஓரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும். (072)

 

06.  எலுமிச்சம் பழச்சாறும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து இலேசாகச் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் வலியுள்ள காதில் ஐந்தாறு சொட்டுகள் விடவேண்டும். இவ்வாறு காலை மாலையாக மூன்று நாட்கள் விட்டு வந்தால்  காது வலி குணமாகும். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் )

 

07.  கரிசலாங் கண்ணி இலைச் சாற்றை 3 துளி காதில் விட்டால் காது வலி நீங்கும்.

 

08.  கரிசலாங்கண்ணிச் சாறு, துளசிச் சாறு இரண்டும் கலந்து இரண்டு மூன்று துளிகள் காதில் விட்டு வந்தால், காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை நிற்கும்.(308)

 

09.  கிருஷ்ண துளசி இலைகளை எடுத்துக் கசக்கிச் சாறு பிழிந்து இரண்டொரு துளிகள் காதில் விட்டால் காது வலி சரியாகும். (077)

 

10.  குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் பூசலாம். இதையே காது வலிக்கு காதைச் சுற்றிப் பூச, நோய் தணியும்.

 

11.  சதகுப்பை இலைகளை சிறிதளவு எடுத்து  காய வைத்துப் பொடித்து, நோயாளியின் படுக்கை அறையில்  வைத்துப் புகைபோட்டால், காது வலி, மூக்கில் நீர் வடிதல், தலை நோய் கட்டுப்படும்.

 

12.  திருநீற்றுப் பச்சிலை இலையைப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர காது வலி, காதில் சீழ் வடிதல் குறையும்.

 

13.  தாழம் பூவிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். இதைத் தலைவலி, உடல்வலி முதலியவைகளுக்கு மேலுக்குத் தடவலாம். இதைக் காது வலிக்கும் இரண்டொரு துளி விடலாம்.

 

14.  துளசிச் சாறு, கரிசாலைச் சாறு இரண்டும் கலந்து காதில் விட்டு வர காது வலி குணமாகும். (308)

 

15.  தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.

 

16.  தேன் (சுத்தமானது) எடுத்து காலை மாலையாக மூன்று நாட்கள் மூன்று சொட்டுகள் வீதம் வலியுள்ள காதில் விட்டு வந்தால் காது வலி தீர்ந்து விடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் )

 

17.  நல்லெண்ணெயில் வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், கற்பூரம்  ஆகியவற்றைப் போட்டுக் காய்ச்சி, தினசரி மூன்று வேளை இரண்டு சொட்டு வீதம் காதில் விட்டு வந்தால் காது வலி குணமாகும். (062)

 

18.  நாய்வேளை இலைகளை எடுத்துக் கசக்கிச் சாறு பிழிந்து இரு துளிகள் காதில் விட்டால், காது வலி குணமாகும்

 

19.  பனை மரத்தின் மட்டையை வெட்டி நெருப்பில் காட்டிச் சாறு பிழிந்து ஓரிரு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது வலி தீரும்.(064)

 

20.  பிரண்டையைத் தீயில் வாட்டிப் பிழிந்த சாற்றை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும் (பிரண்டை காண்க.)

 

21.  பெருங்காயத்தை இரண்டு கிராம் எடுத்து 20 மி.லி. நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சி வடித்து, ஓரிரு துளிகள் காதில் விட்டு வரக் காது வலி தீரும்.

 

22.  பெருங்காயத்தைப் பொரித்து தேங்காய் எண்ணெயில் சிறிது நேரம் ஊற வைத்து அதில் இரு துளிகள் காதில் விட, காது வலி குணமாகும். (058)

 

23.  பெருங்காயம், கற்பூரம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை  நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி  தினசரி 3 வேளைகள் 2 சொட்டு வீதம் காதில் விட்டு வந்தால் எப்படிப் பட்ட காது வலியும் குறையும். (062)

 

24.  பெருங்காயம் 2 கிராம் 20 மி.லி நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டி, ஓரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும். (071)

 

25.  மணித்தக்காளி இலை, துளசி இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்துச் சாறு பிழிந்து மூன்று துளிகள் காதில் விட காது வலி குணமாகும்  (051)

 

26.  மருத மரத்தின் இலையைக் கசக்கிக் காதில் பிழிந்தால், காது வலி குறையும். (மருதமரம் காண்க.)

 

27.  முடக்கத்தான் இலைச் சாற்றைக் காதில் விட, காது வலி, சீழ் வடிதல் ஆகியவை நீங்கும்.

 

28.  முடக்கத்தான் இலையை வாட்டி சாறு பிழிந்து இரண்டு துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும்.  (1561)

 

29.  முருங்கைக் கீரையை (இளந்தளிரான கீரை) உருவி ஒரு பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பூண்டுப் பற்கள் இரண்டு, இஞ்சி ஒரு சுண்டைக்காய் அளவு, சிறிது உப்பு ஆகியவற்றைக் கல்லில் வைத்து நன்கு அரைத்து, அதை எடுத்து வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கிப் பிழைந்தால் சாறு வரும். அந்தச் சாறில் ஐந்தாறு சொட்டுகளைக் காதில் விட வேண்டும். இவ்வாறு காலை மாலையாக மூன்று நாட்கள் காதில் விட்டால், காது வலி தீரும். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் )

 

30.  முருங்கைப் பிசினை வெந்நீரில் கரைத்து  வடிகட்டி மூன்று துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும்.

 

31.  வாழைப் பட்டையைத் தீயில் சூடேற்றிப் பிழிந்து சாறு எடுத்து ஓரிரு துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும் (054)

 

32.  வெள்வேளைச் செடியைப் பறித்து நசுக்கிச் சாறு எடுத்து காலை மாலை ஐந்து சொட்டு வீதம் காதில் விட்டு வர காது வலி தீரும் (055)

 

33.  வெற்றிலையை எடுத்து  சாறு பிழிந்து ஓரிரு துளிகள் காதில் விட்டால் காது வலி நீங்கும்.  (052) (1787)

  

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

 

==========================================================