மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

குடல் - சுகபேதி (Purgation)

1)    சுக்கு, கடுக்காய்ப் பிஞ்சு, சூரத்து ஆவாரை ஆகியவை வகைக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராக் காய்ச்சி 10 கிராம் பேதி உப்பைக் கலந்து சாப்பிட, ஆயாசமின்றிப் பேதியாகும். மோர்ச் சோறு சாப்பிட நின்று விடும்.

 

2)    நில ஆவாரை இலை, சோம்பு, கொத்தமல்லி, சுக்கு ஆகியவை வகைக்கு 10 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மி,லி. யாகக் காய்ச்சி கற்கண்டு கலந்து சாப்பிட, சுகப் பேதியாகும்.

 

3)    முடக்கத்தான் இலை 30 கிராம் எடுத்து வதக்கி, பூண்டுப் பல் ஐந்து  மிளகு பத்து தட்டிப் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு 200 மி.லி யாகக்  காய்ச்சிக் குடித்தால் சுகப் பேதியாகும். வெந்நீர் குடித்தால் பேதி மிகுதியாகும். மோர் பேதியை நிறுத்தும். மோரில் எலுமிச்சம் பழச் சாறு கலந்து கொடுத்தால் பேதி முற்றிலும் நிற்கும்.

 

4)    விழுதியிலை 50 கிராம் எடுத்து இரண்டு லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி, வடிக்கட்டி, விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் நன்கு பேதியாகும்.

 

5)    பொன்னாவாரை இலையும் விதையும் சமனளவு எடுத்து அரைத்து எலுமிச்சை அளவு வெந்நீரில் கொடுத்தால் சுகப் பேதியாகும்.

 

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )20]

{03-06-2021}

 

==========================================================