01. எலுமிச்சம் பழச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
02. கற்றாழைச் சோற்றுக்கு பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது. எனவே இரவில் படுக்கும்போது, நேரடியாகத் தலையில் படும்படித் தேய்த்து, மறுநாள் காலையில் அலசவும். இப்படிச் செய்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, முடி உதிர்வதும் குறையும்.
03. சீரகம், மிளகு சம பங்கு எடுத்து பால்விட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வாருங்கள். தலை அரிப்பு, பொடுகு, பேன் ஒழியும்.
04. பொடுதலைச் சாறெடுத்து
சமனளவு நல்லெண்ணை
சேர்த்துக் காய்ச்சி,
வடித்து, வாரம்
இரண்டு முறை
தலைக்குத் தேய்த்து
முழுகி வந்தால்
பொடுகுத் தொல்லை நீங்கும்.(935)
05. வெண்மிளகு ஒரு தேக்கரண்டி எடுத்து தேங்காய்ப் பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்து முழுகி வந்தால் பொடுகு நீங்கும்.
06. வெந்தயத்தை பாலில் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை நீங்கும்,
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]
{01-07-2021}
==========================================================