01. அரச இலைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அந்த நீரை எடுத்து அருந்தி வந்தால் மிகுதாகம் கட்டுப்படும்.(299)
02.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கைப் பூ, புடலம் பூ ஆகியவை தீராத் தாகத்தையும் தணிக்கும். எனவே தாகம் அதிகம் உள்ளோர் இவற்றை உண்ணலாம்.(272)
03.
நித்திய கல்யாணிப் பூ ஐந்து அல்லது ஆறு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி, கால் லிட்டராக்கி ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுக்க , (அதி மூத்திரம்) அடிக்கடி சிறுநீர் போதல், (அதி தாகம்) அடிக்கடி தாகம் எடுத்தல், உடல் பலவீனம், மிகு பசி (எப்போதும் பசி உணர்வு), பசியின்மை ஆகியவை தீரும்.
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]
{01-07-2021}
==========================================================