01. அம்மான் பச்சரிசி இலைப் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஈறு வீக்கம், வாய்ப் புண், தொண்டைப் புண் ஆகியவை குணமாகும்.(254)
02. கிரந்திநாயகம் இலையுடன் சம அளவு நாட்டுக் கல்நார் சேர்த்து அரைத்து வடை தட்டி, வெயிலில் காயவைத்து, பொடி செய்து, பல் துலக்கி வந்தால் பல் ஈறு வீக்கம், இரத்தக் கசிவு குணமாகும்.(221)
03. கொய்யா இலைகளைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் கொப்பளித்து
வந்தால் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குணமாகும்.
04. செவ்வாழைப் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் ஈறு வீக்கம், இரத்தக் கசிவு, பல் சொத்தை, பல் வலி ஆகியவை வராது.(236)
05. படிக்காரத்தையும் கடுக்காயையும் பொடி செய்து நீரில்கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறில் உள்ள புண்கள் ஆறும்.(225)
06. பிரயான் மரப் பாலைத் தடவி வந்தால், ஈறு வீக்கம், பல் வலி, பல் ஆட்டம் ஆகியவை குணமாகும்.(267) (1999)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================