1) மிளகாய்ப்பூண்டு விதை எண்ணெய் 2 துளி சர்க்கரையில் காலை மாலை சாப்பிடப் பாரிச வாயு தீரும்
2) முடக்கத்தான் இலை, சூரத்து நில ஆவாரை இலை, உத்தாமணி இலை வகைக்கு 30 கிராம் வதக்கி அரை லிட்டர் நீர் விட்டு
200 மி.லி யாகக் காய்ச்சி, காலை மட்டு 3 நாட்கள் இது போல் 7 முறை கொடுக்கப் பாரிச வாயு
தீரும்.
3) வாதமடக்கி இலைச் சாறு ஒரு லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்கு கால் லிட்டர்,
வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்துப் பசும்பாலில் கலக்கிப் பதமாகக்
காய்ச்சி, 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி,
மேற்பூச்சாகப் பூசி, பிடித்துவிட( மசாஜ் ) பாரிச வாயு தீரும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)
அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================