மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

பல் - ஈற்றில் இரத்தக் கசிவு (Gum Bleeding)

 

 

01.   இலந்தை மரத் தளிரைக் கொதிக்க வைத்து, உப்புப் போட்டு, வாய் கொப்பளித்து வந்தால், இரத்தக் கசிவு, தொண்டைப் புண் ஆகியவை குணமாகும்.(250)

 

02.   கிரந்திநாயகம்  இலையுடன் சம அளவு நாட்டுக் கல்நார் சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி, வெயிலில் காயவைத்து, பொடி செய்து பல் துலக்கி வந்தால், இரத்தக் கசிவு, ஈறு வீக்கம் ஆகியவை நீங்கும்.(221)

 

03.   சுக்கு, காசுக் கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு சம அளவு பொடி செய்து பற்பொடியாக்கி பயன்படுத்தி வந்தால் இரத்தக் கசிவு, பல் ஆட்டம், பல் சொத்தை ஆகியவை நீங்கும்.(228)

 

04.   செவ்வாழைப் பழத்தை இரவில்சாப்பிட்டு வந்தால், இரத்தக் கசிவு, பல் வலி, ஈறு வீக்கம், பல் சொத்தை வராது.(236)

 

05.   துத்தி இலை, வேர் முதலியவற்றை முறைப்படி குடிநீரிட்டு பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வருபவர்கள் வாய் கொப்பளித்து வர இரத்தம் வடிவது நிற்கும்.

 

06.   இலந்தை மரத்தின் துளிர்களைப் பறித்து வந்து சிறிது உப்புப் போட்டு  இரண்டு தம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, ஆறியபின், அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாகும். (250)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

==========================================================