01. கொய்யாவின் இளம் தளிர் இலைகளைக் கழுவி, மூன்று தம்ளர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடம் பாத்திரத்தில் கொதிக்க விடவும். பின்னர் குளிர வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல், ஈறு ஆகியவை பலப்படும். வாய் துர்நாற்றம் நீங்கும்.
02. மாசிக் காயைத் தூளாக்கி நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகள் பலமடையும்.(227)
03. மாதுளை மரப் பட்டையை எடுத்து நீரில் இட்டுக் கசாயம் செய்து, வாய் கொப்பளித்து
வந்தால் ஈறுகள் இறுகும்; பற்கள் உறுதிப்படும்.
04. வெள்ளரி இலையைக் கசாயம் செய்து குடித்து வந்தால் பல் இறுகும். ஈறு பலப்படும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================