01. கண்டங் கத்தரிப் பழத்தை உலர்த்தி, நெருப்பில் இட்டு, அதிலிருந்து எழும் புகையை வாயைத் திறந்து வாய்க்குள் பிடித்தால் ஈறு வலி, பல் வலி ஆகியவை குணமாகும்.(229)
02. துத்தி இலை அல்லது துத்தி வேரின் குடிநீரால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில்
உண்டாகும் நோய்கள்
நீங்கும்.
03. பப்பாளி இலையக் காம்புடன் ஒடித்து வந்து அதில் வரும் பாலை விரலில் ஒற்றி வலிக்கும் ஈறு மீது அழுத்தித் தேய்க்க வேண்டும். இவ்வாறு பப்பாளிப் பாலை தொட்டுத் தொட்டு பல் ஈறு மீது வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். அப்போது ஈறுகளில் இரத்தம் வரும். அதைத் துப்பிவிட வேண்டும். இவ்வாறு ஐந்து நிமிடம் செய்த பின்பு வெந்நீரில் சிறிது உப்புப் போட்டுக் கலக்கி வெது வெதுப்பான சூட்டில் வாய் கொப்பளிக்க வேண்டும். காலையும் இரவும் உணவுக்குப் பின்பு இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் ஈறு வீக்கம் குணமாகும். (ஆதாரம் : நாட்டு மருத்துவமணி நாகம்மா “ நூல்)
04. வாகை மரப் பட்டையைக் கரியாக்கிப் பொடி செய்து, பல் தேய்த்து வந்தால் ஈறு வலி, பல் ஆட்டம் ஆகியவை குணமாகும்.(246)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================