01. அகத்திக் கீரை, சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து, கசாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் மனநோய் மறையும்.
02. தாமரைப்பூவை நீர் விட்டு
அரைத்து, ஒரு
கொட்டைப் பாக்கு
அளவுக்கு தினசரி
மூன்று வேளை
என 41 நாட்கள்
தொடர்ந்து மனநோய் உள்ளவர்களுக்குத்
உள்ளுக்குக் கொடுத்து
வந்தால், மனம்
அமைதி பெறுவர்.
(777)
03. பிரமிய வழுக்கை
இலைச் சாற்றுடன்
சம அளவு
நெய் கலந்து
காய்ச்சி வடித்து
காலை மாலை
ஒரு தேக்கரண்டி
கொடுத்து வந்தால்
சித்த பிரமை,
காக்காய் வலிப்பு
ஆகியவை தீரும்.(1075)
04. முருங்கைக் கீரையை
இடித்துப் பொடியாக்கி
ஒரு கொட்டைப்
பாக்கு அளவு எடுத்துப்
பசும்பாலில் கலந்து
அருந்தி வந்தால்
ஹிஸ்டீரியா எனும் மன நோய் குணமாகும்.(976)
(1941)
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,கடகம் (ஆடி )16]
{01-08-2021}
==========================================================