01. அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடிகட்டி, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்துப் பருகி வந்தால் முகம் அழகு பெறும்.(1178)
02. துளசி இலைகளைப் பறித்து கசக்கி முகத்தில் மெல்லத் தேய்த்து, காயவிட்டு சற்று நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் அழகு பெறும். (1791)
03.
தூதுவேளைப் பூ 10 எடுத்து பாலில் போட்டுக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் அருந்தி வந்தால், முக அழகும் வசீகரமும் பெறலாம். (1433)
04.
பப்பாளிப் பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் அழகு பெறும்.
(833)
05.
மூக்கிரட்டை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகப் பொலிவும் வசீகரமும் உண்டாகும்.
(824) (1575)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================