01. அவுரி இலைச் சாறு, மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மி.லி அளவு எடுத்து 500 மி.லி தேங்காய் எண்ணையில் கலந்து, அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும், 35 கிராம் தான்றிக் காயும் அரைத்துக் கலந்து காய்ச்சிப் பதமுடன் இறக்கி வடிகட்டிவைத்துக் கொள்ளவும். இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும். முடி கருத்து தழைத்து வளரும். அத்துடன் பித்தம் தணியும்.
02. கரிசாலை, பூக்காத
கொட்டைக் கரந்தை ஆகியவற்றின் சமன் சூரணம் கலந்து நாள் தோறும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள
வயதில் தோன்றும் நரை மாறும்.
03. கறிவேப்பிலைப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.
04. கொட்டைக் கரந்தைச் செடியை உலர்த்திப் பொடி செய்து கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை தீரும். உடல்பலம் பெறும்.(1717)
05. தாமரைப் பூக் கழாயம் வைத்து தொடர்ந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நரை முடியின் நிறம் மாறி கருமையாகும். (908)
06. நெல்லிகாய், சிகைக்காய், பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து நீரில் நன்றாகத் தேய்த்து அலசலாம். முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். நரை முடி மறையும்.
07. நெல்லிகாய்ச் சாறு, பாதாம் எண்ணெய், எலுமிச்சைச் சாறு சம அளவு கலந்து இரவில் தலையில் தடவி, காலையில் குளித்து வந்தால் இளநரை விலகும்.
08. நெல்லிக்காய், நெல்லிக்
காய் ஊறுகாய், நெல்லி வற்றல் ஆகியவற்றைத் தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.(919)
09. முளைக் கீரை வாரம் ஒரு முறையாவது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை முடி குறையும்.(917) (1191)
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================