01.
அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து வழுக்கைத் தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்து வந்தால், வழுக்கை மறைந்து முடி வளரும்.(858)
02. சீதேவி செங்கழுநீர்ப் பூவை, சந்தனம் சேர்த்து
அரைத்து வழுக்கைத் தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளித்து வந்தால், தலை வழுக்கை சரியாகி முடி வளரும்.(932)
03.
செம்பருத்திப் பூவுடன் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வந்தால், நாளடைவில் வழுக்கை விழுந்த இடத்தில் முடி முளைக்கும்.(920)
04. நேர்வாளங் கொட்டையை எடுத்துக் கொட்டையை உடைத்துப் பருப்பை எடுத்து நீர் விட்டு அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தடவி வந்தால், அந்த இடங்களில் முடி முளைக்கும்.(922)
05. மருதாணிப் பூவை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்துவெயிலில் காய வைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் நாளடைவில் வழுக்கைத் தலையில் முடி முளைக்கும். (912)
06. வெங்காயமும் செம்பருத்திப் பூவும் அரைத்து வழுக்கை மீது தடவி வந்தால். நாளடைவில் முடி முளைக்கும்.
(920)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================