01. ஓமம் ஒரு தேக்கரண்டி எடுத்து, ஒரு கைப்பிடி வேப்பிலை அத்துடன் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.(112)
02. சதகுப்பை இலைகளை சிறிதளவு
எடுத்துக் காய வைத்துப் பொடித்து, நோயாளியின் படுக்கை அறையில் வைத்துப் புகைபோட்டால், காது வலி, மூக்கில் நீர் வடிதல், தலை நோய் கட்டுப்படும்.
03. ஓமம் ஒரு தேக்கரண்டி எடுத்து, ஒரு கைப்பிடி வேப்பிலை அத்துடன் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.(112)
04. சுண்டைக்காய் வேர்ப்பட்டையைப் பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு
சிட்டிகை மூக்கில் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக்
குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் ஆகியவை போகும்.
05. தவசி முருங்கை இரசத்தை (சாறு) வேளைக்கு ஒரு
தேக்கரண்டி அளவு, கொடுத்து வந்தால்
மூக்கில் நீர் பாய்தல், உண்ணாக்கு நோய், ஐயம்
(கபம்), இரைப்பு, பொடியிருமல் ஆகியவை தீரும்.
06. தழுதாழை இலைச் சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டைக் குடைச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல், சளி சிறிது சிறிதாகக் குறையும்.
07. வேப்ப இலை, ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும். (112)
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)20]
{05-08-2021}
==========================================================