01. அறுகம்புல் சாறு எடுத்து அத்துடன் மாதுளம் பூச் சாறு சம அளவு கலந்து மூன்று வேளைகள் பருகினால் மூக்கில் இரத்தம் வடிதல் நிற்கும்.(136)
02. அறுகம்புல் சாறும் மாதுளம் பழச் சாறும் சம அளவு எடுத்து, கலந்து வேளைக்கு 30 மி.லி
வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் மூக்கில் இரத்தம் வடிதல் நிற்கும்.(140)
03. ஆடாதொடை இலையைப் பொடி செய்து 5 கிராம் எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும். சளியுடன் இரத்தம் வருவதும் நிற்கும்.(141)
04. பிரண்டையைத் தீயில் வாட்டிப் பிழிந்த சாற்றை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும். மூக்கில் விட்டால், மூக்கில் வடியும் இரத்தம் நிற்கும்.
05. மாதுளம் பூவைத் தட்டிச் சாறு எடுத்து, அறுகம் புல் சாறுடன் சம அளவு கலந்து 30 மி.லி வீதம் மூன்று வேளை குடித்தால் மூக்கில் இரத்தம் வடிதல் குணமாகும். நலம் பெறலாம்.(136) (140) (1538)
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)20]
{05-08-2021}
==========================================================