01. அத்திப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மாத விடாய் வலி குணமாகும்.(719)
02. கல்யாண முருங்கை இலைச் சாற்றை 50 மி.லி. கொடுக்க மாத விடாய்க் காலங்களில் உண்டாகும் வலி நீங்கும்.(617)
03. கொள்ளு வேக வைத்த நீரை இரு வேளை சிறிதளவு குடிக்க , மாத விடாய்க் கோளாறு வலி நீங்கும்.(637)
04. சோற்றுக் கற்றாழையில் உள்ள சோற்றுப்பகுதியை எடுத்து கூழாக்கி மோரில் கலந்து சாப்பிட மாத விலக்கு, வெள்ளை படுதல் சீரடையும்..(587)
05. புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் மாத விடாய் ஒழுங்காகும்.(597)
06. மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாத விடாய்க் காலத்தில் மூன்று நாள் உண்ண மாத விடாய் வலி இல்லாமல் இருக்கும்,
(599)
07. மூசாம்பரம், தாவரி, ஜடாமாஞ்சில், அசோகப் பட்டை ஆகியவற்றின் தூள் ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலில் கலந்து உண்டால் மாத விடாய் வலி குறையும்.(638)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================