மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தலை - சுற்றல் (Giddiness)

 

01.  கீழாநெல்லித் தைலத்தைப்பூசிக் குளித்து வந்தால் தலைச் சுற்றல் குணமாகும்.(1126)

 

02.  கொத்துமல்லி விதை 100 கிராம், சந்தனம் 50 கிராம், நெல்லி வற்றல் 50 கிராம் ஆகியவற்றை எடுத்து, இடித்து, தூள் செய்து 200 கிராம் சர்க்கரை கலந்து காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தலைச் சுற்றல், நெஞ்செரிச்சல் ஆகியவை குணமாகும்.

 

03.  சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், சீரகம் இவைகளை ஐந்து கிராம் வீதம் எடுத்து அரைத்து, பொடியாக்கி, காலை, மாலை அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தலைச் சுற்றல் தீரும்.(275)

 

04.  மாதுளம் பழச் சாறுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் தலை சுற்றல் குணமாகும்.  (1725)

 

05.  நெல்லி வற்றலும்  (உலர்ந்த காய்) பச்சைப் பயறும் வகைக்கு 20 கிராம் ஒரு லிட்டர்  நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடித்து வேளைக்கு 100 மி.லி யாக, காலை மாலை சாப்பிட்டு வர, தலைசுற்றல், கிறு கிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு தீரும்.

 

06.  நெல்லி வற்றல், பச்சைப் பயறு கசாயம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல், இரத்தக் கொதிப்பு தீரும்.  (1432)

 

07.  நெல்லிக் காய்ச் சாறு ஒரு அவுன்ஸ் (30 மி.லி ) குடித்தால் எப்படிப்பட்ட தலை சுற்றல், கிறு கிறுப்பும் குணமாகும்.  (277) (1943)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================