மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

ஒவ்வாமை (Allergy)

01.  சிறுகுறிஞ்சான் வேர்ப் பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வாந்தி ஏற்பட்டு நஞ்சினால் ஏற்படும் ஒவ்வாமையை நீக்கும்.

 

02.  சுக்குடன் வெந்தயம் சேர்த்து, பொடித்து, தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால் ஒவ்வாமை (அலர்ஜி) நீங்கும்.

 

03.  தொட்டாற் சுருங்கி இலைச் சாறு எடுத்து தடவினால் ஒவ்வாமை, தோல் தடிப்புகள் சரியாகும்

 

04.  நாயுருவி வேர்க் கசாயம் அல்லது இலைச் சாறு காலை மாலை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் ஒவ்வாமையால் வரும் இருமல் தீரும்.

 

05.  வேப்பங் கொழுந்து துளசி இலை சேர்த்து அரைத்து தினமும் காலையில் சுண்டைக் காய் அளவு சாப்பிட்டு வந்தால்  ஒவ்வாமை (அலர்ஜி) குணமாகும்.  (1018)

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

 

==========================================================


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக