மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 28 மே, 2021

அசதி (Drowsiness)

01.    ஆவாரையின் பஞ்சாங்க ( வேர், பட்டை, இலை, பூ, காய் ) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் உட்கொள்ள உடல் முழுதும் உள்ள வேதனை தீரும்.

 

02.    பொன்னாவாரை விதைகளை எடுத்து மைய அரைத்து, சிறு நெல்லிக் காயளவு குளிர்ந்த நீருடன் கலந்து உள்ளுக்கு அருந்தினால் அசதி நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும். (785)

 

03.    முடக்கத்தான் இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட்டால் உடல் அசதி தீரும்.

 

04.    முருங்கை ஈர்க்கை சேகரித்து ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடல் வலி, கை, கால் அசதி தீரும்.


   ==========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=============================================================================

====================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )14]

{28-05-2021}

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக