மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கடி - பூரான் கடி (Centipede Bite)

01.   அவரி வேர் 20 கிராம், அறுகம்புல் 30 கிராம், மிளகு 3 கிராம் மையாய் அரைத்து கோலிக்குண்டு அளவு காலை மாலை சாப்பிட்டு, இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் தீரும். இம்மருந்தை நாள்தோறும் 3 வேளை உப்பு, புளி நீக்கிச் சாப்பிடப் பாம்பு, தேள், பூரான், செய்யான் ஆகியவற்றின் நஞ்சு நீங்கும்.

 

02.   எருக்கம் பால் சிறிது எடுத்து  பூரான் கடித்த இடத்தில் விட வேண்டும். பின்பு ஒரு எலுமிச்சங்காய் அளவு பனை வெல்லம் [ கருப்பட்டி ] தந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். வலி நீங்கிவிடும். நஞ்சு மறைந்து விடும். அவ்வளவுதான்.  ( ஆதாரம் :“ நாட்டு மருத்துவமணி நாகம்மா நூல், பக்கம் 25 & 26)

 

03.   குப்பை மேனி சாறு பத்து மி.லி. கொடுத்து சுட்ட உப்பு, சுட்ட புளியுடன் உணவு எடுக்க பூரான் கடி விடம் நீங்கும்.

 

04.   குப்பைமேனி இலை, உப்பு, மஞ்சள் ஆகியவை எடுத்து அரைத்து பற்றுப் போட்டால் பூரான் கடி விஷம் நீங்கும்.(876)

 

05.   சிறியாநங்கை (நிலவேம்பு)  மூலிகையின் இலைகளைப் பறித்து வந்து சாறு எடுத்து 25 மி.லி அளவுக்கு அருந்தலாம். பூரான் கடி விஷம் விலகும்.

 

06.   தும்பை இலைச் சாறினை எடுத்து, கடி வாயில் தடவினால், பூரான் கடி விஷம் இறங்கும்.  (866) (1774)

 

07.   பூரான் கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான் போல் தடிப்பு உண்டாகும்.

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================


 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக