மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கண் - மாலைக்கண். (Night-Blindness)

 

01.   அவரி இலைக் கொட்டைப் பாக்கு. அளவு அரைத்து 250 மி.லி வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிக்கட்டி, அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை, அந்திமாலை தீரும்.  (அவரி காண்க)

 

02.   அவரி என்னும் நீலி மூலிகையை எடுத்து அரைத்து சுண்டைக் காய் அளவு சாப்பிட மாலைக் கண் நோய் குணமாகும். (உப்பு, புளி சேர்த்தல் கூடாது) (009)

 

03.   கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டு வந்தால்  மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

 

04.   மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து காலை மாலை 30 மி.லி வீதம் சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் நோய் தீரும்.  (018)

 

05.   கீழாநெல்லிப் பொடி, மூக்கிரட்டைப் பொடி, பொன்னாங்கண்ணி இலைப் பொடி சம அளவு எடுத்து வெந்நீரிலோ, தேனிலோ சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் குணமாகும்.(018)

 

06.   பப்பாளிப் பழம் மாலைக் கண் நோயின் அறிகுறி தென்பட ஆரம்பிக்கும் போதே சாப்பிட ஆரம்பித்து விட்டால் மாலைக் கண் நோயை வர விடாமல் தடுத்து விடலாம். (036)

 

07.   மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றை உலர்த்திப் பொடி செய்து சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்  (018)

 

08.   மூக்கிரட்டை வேரை உலர்த்திப் பொடித்துக் காலை மாலை ஒரு சிட்டிகை தேனில் குழைத்து உண்ண, மாலைக்கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

 

09.   வேப்பங் கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர  மாலைக் கண் நோய் அகலும். (926)

 

10.   வேப்பங் கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கண்ணில் இருக்கும் படலம் மறைப்பு அகலும். காமாலை, மாலைக் கண், புழுவெட்டு நோய்கள் அகலும்

 

11.   வேப்பங்கொழுந்து, முதிர்ச்சியான இலை, ஆகிய இவ்விரண்டையும் இடித்து, அப்பொடியின் அளவிற்கு அரைப்பங்கு ஓமமும் உப்பும் சேர்த்துப் பொடித்து, புசிக்கத் தொடங்கின், அதனால், கண்ணிலிருக்கும் படல மறைப்பு, காமாலை, மாலைக்கண், புழு வெட்டு முதலிய நோய்கள் அகலும்.

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

 

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக