மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கரப்பான் (Scurf)

01.   அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்


02. கரப்பானுக்கு ஆங்கிலத்தில் SCURF என்றும், சொறி கரப்பானுக்கு SCURVEY என்றும் பெயர்.


03.   கொத்துமல்லி விதை எண்ணெய் கரப்பான், காளான்படை ஆகிய தோல் நோகளுக்கு சரியான மருந்தாகும்.

 

04.   சிற்றாமணக்கு வேர் புங்க வேர் இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்து வந்தால் கரப்பான் தீரும்.(825)

 

05   துத்தி இலையை நன்றாக அரைத்துக்  அந்தச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் அளவு நன்றாகக் காய்ச்சி வடிகட்டிப் பாட்டிலில் வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்குத் தடவி வந்தால் இந்நோய் குணமாகும்.

 

06.   புங்க மர வேர், சிற்றாமணக்கு வேர் இரண்டையும் சம அளவு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்து வந்தால் கரப்பான் தீரும்.  (825)

 

07.   முடக்கற்றான் மூலிகையானது ,கீல் வாதம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் பாதத்தைப் பற்றிய வாதம் ஆகியவற்றைப் போக்கும்.


08. வேப்பிலையுடன் சிறிது தேனும் மஞ்சளும் சேர்த்து அரைத்துத் துணியில் தடவி மேலுக்குப் போட கரப்பான், சொறி சிரங்கு, அம்மைப்புண்  இவைகள் நீங்கும். எரிச்சல் இருந்தால் அரிசி மாவு கூட்டிக் கொள்ளலாம்.

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக