01. பெயர் தெரியாத பலவகையான பூச்சிகள் கடித்து காயம்
ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் அரிப்பு காணாக்கடி என்று அழைக்கப்படுகிறது.
02. குப்பைமேனி இலையை அரைத்து சிறிது சுண்ணாம்பு கலந்து தடவினால் பொதுவாக பெயர் தெரியாத விஷ கடிகளால்
ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.(892)
03. தேள்கொடுக்குச் செடி காணாக்கடியால் தோன்றும் ஒவ்வாமையை நீக்கி தோலுக்குப் பொலிவைத் தரும் அற்புத மூலிகை ஆகும்.
04. நஞ்சறுப்பான் கொடி இலையப் பறித்து அரைத்து கடி வாயில் கட்டினால் தேள் கடி போன்ற கடி விஷம் முறியும். (906)
05. பாதாளமூலி வேரை எடுத்து உலர்த்தி பொடி செய்து 5 கிராம் சாப்பிட்டால் கடி விஷம் முறிவடையும். (1969/1)
06. வெங்காயத்தை நறுக்கி கடிவாயில் தடவினால் (தேய்த்தால்) விஷக்கடி வலி குறையும். (903)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக