மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

குடல் - சீத பேதி (Dysentery)

01.   அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு பொடி செய்து 3 சிட்டிகை பாலில் கலந்து உட்கொண்டு வந்தால் சீத பேதி குனமாகும்.(091)

 

02.   அவரை இலைச் சாறு 25 மி.லி, பசுந்தயிர் 50 மி.லி சேர்த்து  வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.(090)

 

03.   அவரை இலைச்சாறு 25 மி.லி, பசுந்தயிர் 50 மி.லி சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.(103)

 

04.   ஆளி விதைகளை அரைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, செரியாமை அகியவை சரியாகும். (718)

 

05.   கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரை  சேர்த்துச் சாப்பிட்டால் சீத பேதி மூன்று நாட்களில் குணமாகும்.(089)

 

06.   கசகசாவை வறுத்து, தூள் செய்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட, சீத பேதி குணமாகும். (098)

 

07.   கற்றாழையின் இளமடலின் சோற்றுடன் சீரகம், கற்கண்டு சேர்த்து இரத்தமும்

            சீதமும் கலந்த கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.

 

08.   நாட்டுச் சர்க்கரையுடன் பசு வெண்ணெய் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி, குணமாகும். (099)

 

09.   பனை நுங்கினை தோல் உரிக்காமல் ( அதாவது நுங்கின் மேல் உள்ள கடுக்காயுடன் ) சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.(095)

 

10.   பிண்ணாக்குக் கீரையைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்து நெய் கலந்த  சோற்றுடன் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். (093)

 

11.   புளியங்கொட்டைத் தோல், மாதுளம் பழத் தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும் பாலில் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். (094)

 

12.   மலை வாழைப் பழத்தை நல்லெண்னையில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். (097)

 

13.   வெந்தயத்தை வறுத்து இடித்து வெல்லம் சேர்த்துப் பிசைந்து 4 முறை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். நலம் பெறலாம். (096)

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )20]

{03-06-2021}

==========================================================


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக