காது நோய் 
          
01.  எருக்கம் பழுப்புச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் கலந்து, வசம்பு, பெருங்காயம், இலவங்கப் பட்டை, பூண்டு வகைக்கு 10 கிராம் தூள் செய்து கலக்கிப் பதமுறக் காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டி (இதன் பெயர் எருக்குத் தைலம்) நான்கு துளி காதில் விட்டு வரச்  சீழ்,
நாற்றம், இரத்தம் வடிதல், வலி ஆகியவை தீரும்.{ எருக்குமருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் தான் அதற்கு முறிப்பு }
02.  சுக்கு ஒரு துண்டு எடுத்து  தோல்
நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பால், சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சப்பிட்டு வரக் காது குத்தல் தீரும்.
03.  துளசி இலைச் சாறு, கரிசாலைச் சாறு இரண்டும் கலந்து  சில
துளிகள் காதில் விட்டு வரக் காது வலி, காதில் இரத்தம், சீழ்
வடிதல் ஆகியவை குணமாகும்.
           காது
– மந்தம்
01.   திருநீற்றுப் பச்சிலை இலைகளைப் பறித்து வாட்டிப் பிழிந்து இரண்டொரு துளிகளைக் காதில் விட்டால் காது மந்தம் விலகும். (073)
(1365)
02.   .துளசி இலையைக் கதிர்களுடன் வாட்டிப் பிழிந்த சாறு காலை மாலை இரண்டு துளி வீதம் காதில் விட்டு வர 10 அல்லது 12 நாட்களில் காது மந்தம் தீரும். (1396)
03.   தூதுவேளைக் கீரையைச் சமைத்து உண்பதால் காது மந்தம் விலகும். காது அடைப்பு நீங்கும். மூச்சு வாங்குதல் தீரும் .(080)
04.   தூது வேளைக் கீரையை உண்பதால் மூச்சு வாங்குதல், காது அடைத்தல், காது மந்தம் ஆகியவை விலகும்.  (080)
(117) (1295) (1786)
         காது, மூக்கு, தொண்டை நோய்கள்
01.      கிராம்பு 5 , திப்பிலி 10 , மஞ்சள் தூள் அரைத் தேக்கரண்டி, மிளகு 5 , இவற்றை 3 தம்ளர் நீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்து வரலாம். காது, மூக்கு, தொண்டை நோய்கள் சீரடையும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:- 
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” 
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் 
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்
 மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்  குறிப்பு:
  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக