மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

கீல்பிடிப்பு (Gout)

 

01.  ஆடாதொடை இலை ஒருபங்குக்கு எட்டுப் பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி எட்டில் ஒரு பங்காகக் குறுக்கி வடிகட்டிய குடிநீரைத் துணியில் தோய்த்து ஒற்றடமிட, வீக்கம், சூலை, கீல்பிடிப்பு முதலியன தணியும்.

 

02.  கொன்றைப் பழத்தின் உள்ளீடான, புளியை நீர் விட்டு அரைத்து, கொதிக்க வைத்துப் பூசினால் கீல் பிடிப்பு முதலிய பிடிப்புகள் நீங்கும்.

 

03.  தழுதாழை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒற்றடம் கொடுத்து வர சுளுக்கு, கீல் பிடிப்பு, மூட்டு வலிகள் தீரும்.

 

04.  நிலவேம்பு சமூலம் 50 கிராம், வெந்நீர் 1 லிட்டர், கிராம்புத்தூள் அல்லது பொடித்த ஏலம் 5 கிராம் எடை எடுத்து ஒன்று கூட்டி 6 மணி நேரம் ஊறவைத்து, 30 மி.லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுத்துவர முறைச்சுரம், குளிர்ச்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை இவை போகும்.

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

 

=========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக