01. அழிஞ்சல் (சிவப்பு அழிஞ்சல்) வேர்ப் பட்டையைத் தூள் செய்து கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி சம எடை சேர்த்து, பொடித்து அரை தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.(946)
02. எருக்கு இலையும்.
வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் பசு வெண்ணெயில் கலந்து
நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும்
குணமாகும். உப்பில்லாமல் பத்தியம் இருத்தல் வேண்டும். புளி காரம் எதுவும் கூடாது.
தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ புண் குணமடையும்.
03. கடுக்காய் வேர், பட்டை, இலை, பூ உலர்த்தி, இடித்து, சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை அரைத் தேக்கரண்டி எடுத்து பசும் பாலில் கலந்து அருந்தி வந்தால் தொழுநோய் குணமாகும்.(942)
04. கோணிக் கிழங்கை காயவைத்து இடித்து, தூளாக்கிப் பாலுடன் சாப்பிட்டு வந்தால் குட்டநோய் குணமாகும்.(512) (1966)
05. சாதிக்காய், சாதிப்பத்திரி, கிராம்பு, சிவப்பு அழிஞ்சல் தூள் ஆகியவை சம எடை எடுத்து பொடித்து கால் தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொழு நோய் குணமாகும்.(946)
06. சிவனார் வேம்பு சமூலத்தை எடுத்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, இடித்து, பொடி செய்து கற்கண்டும் பாலும் சேர்த்து அருந்தி வந்தால் குட்ட நோய் குணமாகும்.(1722)
07. துத்தி விதைகளைப் பொடித்து சர்க்கரையுடன் கலந்து இருநூற்று
ஐம்பது மி.கி. முதல் ஐநூறு மி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள் உடல்
சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேக அனல்
முதலியவை கட்டுப்படும்.
08. துத்தி விதையைப் பொடித்து, சர்க்கரையுடன் கலந்து 2 கிராம் அளவு காலை மாலை உண்டு வர, கரும்புள்ளி, உட்சூடு, பெருநோய் நீங்கும்.
09. நன்னாரி வேர் சூரணம் செய்து வெண்ணெயில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆரம்ப நிலை குட்ட நோய் குணமாகும்.
(622) (1462)
10.
புன்னையின் இலைகள்
பூக்கள் மற்றும் பட்டையை நிழலில் உலர்த்தி அரைத்துச் சூரணம் (பொடி) செய்து தினம் ஒரு வேளை கொடுக்க
மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம், மேகம் ஆகியவை குணமாகும்.
11.
புன்னை எண்ணெய் பூசி
வர மகாவாத ரோகம், முன் இசிவு,
பின் இசிவு, கிருமி ரணம், சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும். (1486)
12. வேப்பம் பட்டை [
நூறுஆண்டு ஆன மரத்திலிருந்து எடுத்த்து
] உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில்
ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48
- 144 நாளில் 18 வகை குட்டமும்
குணமாகும். முதியார் கூந்தல் கொடியை நீர் சேர்த்து இடித்து அடுப்பில் வைத்து காய்ச்சி அரைபாகமாகச் சுருங்கியவுடன் வடிகட்டி அத்துடன் நல்லெண்ணெய் கலந்து, மரமஞ்சள், கருஞ்சீரகம், அதிவிடயம் ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து பாலில் அரைத்து அவற்றையும் எண்ணெயில் போட்டு மீண்டும் காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தடவிக் குளித்து வந்தால் தொழு நோய் கட்டுப் படும். ( 941)
13. வேப்பம் பூவை இரண்டு தம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொழுநோய் குணமாகும். (625)
14. வேப்பமரத்தில் மிக முதிர்ந்த மரமாகப் பார்த்து, அதன் பட்டையை இடித்து அத்துடன் பூவரசம் பட்டைத் தூளைக் கலந்து 2 கிராம் எடுத்து சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய் குணமாகும். (1653)
15. வேப்பம் பிசினைத் தண்ணீரில் கரைத்து நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் தொழு நோய் குணமாகும்.
(944) (1932) (2005)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக