மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

கழுத்து - வலி

01.   அமுக்கிராங் கிழங்கைப் பொடித்து  தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து, கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போட கழுத்து வலி குணமாகும்.(078)

 

02.   ஆடாதொடை இலை, நுணா இலை, வாதநாராயணன் இலை ஆகியவற்றை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து, இத்துடன் 50 கிராம் உளுந்து, தலா அரை தேக்கரண்டி மஞ்சள், கடுகு, சேர்த்து, முட்டையின் வெள்ளைக் கரு விட்டு நன்கு அரைத்து  கழுத்து வலி, மூட்டு வீக்கம், மூட்டு வாதம், இடுப்பு வலி உள்ள இடங்களில் பற்றுப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

 

03.   ஆடாதொடை இலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுக்க, கழுத்து வலி குணமாகும்.(1154)

 

04.   நொச்சி இலையை மெல்லிய துணியில் திணித்து தலையணையாகப் பயன்படுத்தினால், மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) தீரும்.

 

05.   நொச்சித் தைலம் சிறிது எடுத்து வெந்நீரில் இட்டு வாரம் இருமுறை  குளித்து வந்தால் கழுத்து வலி, மண்டை வலி, பொட்டு வலி ஆகியவை தீரும்.  (415)


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

==========================================================


 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக