01. தழுதாழை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒற்றடம் கொடுத்து வர சுளுக்கு, கீல் பிடிப்பு, மூட்டு வலிகள் தீரும்.
02. பிரண்டைத் துண்டுகளை நெருப்பில் வாட்டி எடுத்து சாறு பிழிந்து, அத்துடன் மஞ்சள் தூள், புளிக்கரைசல்,உப்பு சேர்த்துக் குழம்புப் பதத்தில் கிளறி , அடிபட்ட வீக்கம், சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குப் பற்றுப்போட நல்ல பலன்கிடைக்கும்.
03. புளிய இலைகளை அவித்து சூட்டோடு சூடாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுத்து, அவித்த இலைகளையும் அந்த இடத்தில் கட்டி வந்தால் சுளுக்கு குணமாகும். (580)
04. மஞ்சள் தூளுடன் சிறிது உப்பும் எலுமிச்சம் பழச் சாறும் கலந்து பூசினால் சுளுக்கு, புண்கள், மூட்டு உளைச்சல் ஆகியவை குணமாகும்
05. மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு, இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து, அதைச் சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுப் போட, சுளுக்கு விரைவில் குணமாகும்.(583)
06.
மிளகுத் தூள் ஒரு மேஜைக் கரண்டி எடுத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து
நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர சுளுக்கு கீல் வாத
வீக்கம் முதலியவை சரியாகும்.
07. மூசாம்பரம் என்னும் கரியபோளம் சுளுக்கிற்கு நல்ல மருந்து. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளற வேண்டும். பின்பு, நீரில் கரைத்து வைத்த கரியபோளக் கரைசலை அத்துடன் சேர்த்துக் கிளறி, இறக்கி, இளஞ் சூட்டில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால், சுளுக்கு நீங்கிவிடும்.
08. வெள்ளைப் பூண்டினை உப்பு சேர்த்து இடித்து சுளுக்குப் பட்ட இடத்தில் தடவி வர சுளுக்கு குணமாகும்.(570)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )24]
{07-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக