மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 2 ஜூன், 2021

கருப்பை - பிறவகை தொந்தரவுகள்.

            கருப்பை இறக்கம்


01.   பழம்புளி, மஞ்சள், கரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்து சிறு உருண்டை 12 நாட்கள் சாப்பிட கருப் பை இறக்கம் குணமாகும். (636)

        

      கருப்பை நீர்க்கட்டி

01.  இலவங்கப் பட்டைத் தூள் அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் விட்டுக் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் கருப்பை கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய்,  ஆகியவை சரியாகும். (Harish)

 

02.  கழற்சிக்காய்ப் பொடி கால் தேக்கரண்டி, சிறிதளவு மிளகுப் பொடி இரண்டையும் மோரில் கலந்து  வெறும் வயிற்றில்48 நாட்கள் குடித்து வர்வும். பெண்களுக்கு மாத விலக்குப் பிரச்சினை கட்டுப்படும்; அதிக இரத்தப் போக்கு, வெள்ளைப் போக்கு, நீர்க்கட்டி அகலும்.

 

03.  நாயுருவி வேர்க் கசாயம் சாப்பிட்டு ந்தால் கருப்பையில் உண்டாகும் குல்மக் கட்டி (நீர்க்கட்டி) குணமாகும்.

 

             கருப்பைவெட்டை (Gleet)


01.   அறுகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம், சித்தரத்தை, மாதுளம் பூ சேர்த்துக் கழாயம் செய்து சாப்பிட்டு வர வெட்டை நோய் குணமாகும்.(943)

 

             கருப்பை பலம் பெறல்

 

01.   சதகுப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம் சம அளவு எடுத்து அரைத்து பனை வெல்லம் சேர்த்து காலை மாலை 5 கிராம் வீதம் சப்பிட்டு வந்தால் கருப்பை பலம் பெறும்.(609)

 

02.   ரோஜாப்பூ குல்கந்து காலை மாலை  இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் கருப்பை பலமடையும்.(606)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

 

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக