மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

காயம் (Wound, Trauma, Hurt)

 

01.   அகத்திக் கீரையை அவித்து அரைத்துக் காயங்களில் வைத்துக் கட்டுப் போடலாம். கட்டலாம்.

 

02.   கொத்துமல்லி விதையைப் பொடி செய்து காயத்தின் மீது அடிக்கடி தடவி வந்தால், காயம் விரைவில் ஆறும்.

 

03.   கொய்யா இலைகளை அரைத்து, புண், காயங்களின் மீது தடவினால், விரைவில் ஆறிவிடும்.

 

04.   தவசி முருங்கை இலையை அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு வதக்கிக் கட்ட, உடன் வேதனை குறைந்து குணமாகும்.

 

05.   பழம்பாசி வேர் எண்ணெய் காயத்தைக்  குணமடையச் செய்யும் தன்மையுடையது.

 

06.   புங்கமரத்தின்  இலைகளைத் தூள் செய்து, சிற்றாமணக்கு எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, அடுப்பிலிருந்து இறக்கும் போது, தேங்காய் கலந்து பிசைந்து காயத்தின் மீது தடவி வர காயம் விரைவில் ஆறும். (528)

 

07.   மருதாணி இலைகளை அரைத்து நீரில் கலக்கி காயத்தைக் கழுவினால், சிறு காயம், சிராய்ப்புக் காயம் குணமாகும்.(1028)

 

08.   வசம்புத் தூளைக் காயத்தின் மீது தூவி வந்தால் காயம் விரைவாகக் குணமடையும்.(529)

 

09.   வேப்பிலையை எடுத்து சிறிது பெருங்காயம் சேர்த்து மைய அரைத்து காயத்தின் மீது தடவி வந்தால் காயம் விரைவில் ஆறும். (453) 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக