மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

புற்றுநோய் (Cancer)

 

01.   அறுகம்புல் ,வேப்ப இலை இரண்டையும் சம அளவு எடுத்து நீர் சேர்த்துக் கசாயம் செய்து தினசரி 100 மி.லி சாப்பிட்டு வந்தால் புற்று நோய் கட்டுப்படும்.(816)

 

02.   உலர் திராட்சையும் கற்கண்டும் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர, புற்று நோய், மூளைக்கட்டி, இதய நோய் சீர்படும்; குணமாகும்.(819)

 

03.   ஏலக்காய், சுக்கு, மிளகு நித்திய கல்யாணிப் பூ. சுண்டை வற்றல் இவற்றுள் நித்திய கல்யாணிப் பூவை உலர்த்தி இடித்து பொடியாக்கி, மற்ற சரக்குப் பொடிகளுடன் கலந்து அவித்து ஒரு வருடம் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(818)

 

04.   திராட்சை (உலர் திராட்சை) பழமும் கற்கண்டும் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் மூளைக் கட்டி, புற்று நோய், இதய நோய் சீர்படும்; குணமாகும். (819)

 

05.   தூதுவேளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், புற்றுநோயிலிருந்து பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

 

06.   தூதுவேளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவேளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது

 

07.   நித்திய கல்யாணிப் பூ, சுக்கு, மிளகு, ஏலம், சுண்டை வற்றல், இவற்றில் பூவை உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி மற்ற சரக்குப் பொடிகளுடன் கலந்து அவித்து ஒரு வருடம் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(818)

 

08.   புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றின் பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவேளை இலையைப் பயன்படுத்தி, பூரண நலத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

 

09.   மஞ்சள் தூள் சிறிது எடுத்து சூடான நீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். செரிமான பிரச்சினைகளும் சீராகும். முதுமையைத் தள்ளிப்போடலாம்.

 

10.   மாதுளையில் ஃபிளவனாய்டுகள் என்று அழைக்கப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் ( Anti-Oxidants )உள்ளன. அதனால் புற்று நோய் வராமல் தடுக்கும்.

 

11.   முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.   (1257)

 

12.   விளாம் பழம் பெண்களுக்கு மார்பகம், கருப்பை ஆகியவற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும்.

 

13.   வெள்ளரியில் LIGNANS என்னும் பாலிபீனால் இருப்பதால், மார்பகம், கருப்பை, சினைப்பை புற்று நோய்கள் வராமல் காக்கும்.

 

14.   வெள்ளைப் பூசணிச் சாறு 100 மி.லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.(817)

 

15.   வேப்பிலை, அறுகம் புல்  சேர்த்து கசாயம் செய்து 100 மி.லி அருந்தி வந்தால், புற்று நோய் கட்டுப்படும்.(816) (1263)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக