மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

நோய் - தோல் நோய் குணமாக (Curing skin diseases)

01.   கருஞ் செம்பை இலையுடன் குப்பை மேனி இலைகலைச் சேர்த்து அரைத்து, கலக்கித் தடவி நன்கு காய்ந்த பின் குளித்து வந்தால் படை மற்றும் தோல் வியாதிகள் குணமாகும்..(1032)

 

02.   குப்பை மேனி இலை, மஞ்சள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வர ,தோல் நோய்கள் குணமாகும்.(1000)

 

03.   சிரட்டைத் தைலம் தோல் வியாதிக்குச் சிறந்தது.(994)

 

04.   தகரைச் செடியின் ( பொன்னாவாரைச் செடி) வேரை எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்துப் பூசி வந்தால் , தோல் வியாதிகள் குணமாகும்.(993)

 

05.   தாளி சாதி சூரணம் 50 கிராம் மற்றும் அமுக்கரா கிழங்கு சூரணம் 100 கிராம் ஆகியவற்றைத் தேனில் சாப்பிட்டு வந்தால் அவை சர்வரோக நிவாரணியாகச் செயல்படும்.(555)

 

06.   பூவரசு மரத்தின் [ நூறு ஆண்டுகள் வயதான மரம் ] காய், பூ, பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து, நிழலில் நன்கு உலர்த்தி, சூரணமாக்கி, காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட தோல் வியாதிகளுங் கூட குணமாகும்.(1026) (1496)

 

07.   மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்,(1155)

 

08.   புற்று மண் பற்றிட்டு அரை மணி நேரம் இளம் வெயிலில் (காலை வெயில்) இருந்து, பின்னர் குளித்தால், தோல் நோய்கள் அகலும்.(1022)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக