01. அத்திப் பாலை எடுத்து புரையோடிய புண் மீது தடவி வந்தால் புண் விரைவாக ஆறும்.(1161)
02. ஊமத்தை இலைச்சாற்றைச் சமனளவு தேங்காய்
எண்ணெயில் காய்ச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த
ரணம்,
சதைவளரும் புண் புரைகள், தீரும்.
03. கீழாநெல்லியின் இலையையும் வேரையும் உலர்த்திப் பொடித்து கழுநீரில் குழைத்து, புண் புரைகளுக்கும், வீக்கங்களுக்கும் பூசலாம்.
04. மாவிலங்க மரப் பட்டை 150 கிராம்,
மூக்கரட்டை 75 கிராம் எடுத்து ஒன்றரை லிட்டர் நீர் விட்டு ,குடிநீர் செய்து, அதில் 50 மி.லி
கொடுத்து வந்தால், புரையோடிய நாட்பட்ட புண்கள், விரை வீக்கம் நீங்கும்.
05. வேப்பங்கொடையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகள் புண்களையும் குணப்படுத்தும்.
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)
அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக