மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தேவையற்ற முடி - உதிரச் செய்ய (Removal of unnecessary hair)

01.  உலர்ந்த ஆவாரம் பூ 100 கிராம், பூலாங் கிழங்கு 100 கிராம், கோரைக் கிழங்கு கால் கிலோ, அனைத்தையும் வாங்கி அரைத்துப் பொடியாக்கி, தினமும் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.

 

02.  கடுகு எண்ணெயை இலேசாகச் சூடு படுத்தி முகத்தில் தடவி மசாஜ் செய்தால், பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கலாம்.

 

03.  குடமஞ்சளை அரைத்து இரவில் முகத்தில் பூசி, காலையில் கழுவினால் பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடி பிரச்சினைக்கு, முற்றுப் புள்ளி வைக்கலாம்.

 

04.  குப்பைமேனி இலை, விரலிமஞ்சள், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை எடுத்து சற்று நீர் விட்டு அரைத்து உடலில் பூசி உலரவிட்டு, பின்பு  கழுவினால், அந்த இடங்களில் இருந்த முடிகள் அகன்றுவிடும்.(1764)

 

05.  மஞ்சளை அரைத்து தேவை இல்லாத முடி உள்ள இடங்களில் இரவில் தடவி காலையில் கழுவி வந்தால்  அந்த முடிகள் நாளடைவில் உதிர்ந்து விடும். (1278)

 

06.  வசம்பு, கொத்துமல்லி விதை, லோத்திரப் பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூசினால் முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகு பெறும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக