மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தும்மல் (Sneeze)

 

01.  அகத்திக் கீரைச் சாறு, அகத்திப் பூச் சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நிற்கும்.(160)

 

02.    அதிமதுரம், சிற்றரத்தை, திப்பிலி, பனங்கற்கண்டு தலா 100 கிராம் எடுத்து, பொடித்து, தினமும் 2 கிராம் காலை மாலை என 2 வேளைகள் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், சைனஸ், தும்மல், தலை பாரம் குறையும்

 

03.  இஞ்சியை [முற்றிய] தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து, சம அளவு பசும்பால் கலந்து, இக்கலவைக்குச் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமுறக் காய்ச்சி வடித்து ( இஞ்சித் தைலம் ) வாரம் இருமுறை தலையிலிட்டுக் குளித்து வர நீர்க்கோவை, நீர்ப்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்பு இசிவு,தலைப்பாரம், அடுக்குத் தும்மல் தீரும்.

 

04.  தழுதாழை இலைச் சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டைக் குடைச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல், சளி சிறிது சிறிதாகக் குறையும்.

 

05.    திப்பிலிப் பொடியை கால் தேக்கரண்டி அளவு எடுத்து மஞ்சள் தூள் மற்றும் இஞ்சிச் சாறு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து 50 – 60 மி.லி உள்ளுக்குக் கொடுத்தால் இருமல், தும்மல் போன்றவை  குணமாகும்.

 

06.    தூதுவேளை இலைப் பொடியுடன் மிளகுப்பொடி சேர்த்து தேன் அல்லது பாலில் கலந்து அருந்தினால், தும்மல் நிற்கும்.. (145) (1123)

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக