மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

பல் - ஆட்டம் (Tooth Infirmity)

 

01.   ஆலம்பாலைக் காலை மாலை தடவி வர, வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்

 

02.   சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு சம அளவு எடுத்துப் பொடி செய்து பற்பொடியாக்கிப் பயன் படுத்தி வந்தால் பல் ஆட்டம், பற் சொத்தை, இரத்தக் கசிவு ஆகியவற்றைத் தடுக்கலாம்.(228)

 

03.   துத்திச் செடியின் இலை, வேர்களை எடுத்து நீர் விட்டுக் கழாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் ஆட்டம், பல் வலி, பல் கூச்சம் ஆகியவை குணமாகும்.(235)

 

04.   பிரயான் மரப் பாலை எடுத்துத் தடவி வந்தால் பல் ஆட்டம், பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை குணமாகும்.(267) (1999)

 

05.   மகிழ  மரத்தின் பிஞ்சு இலைகளை மென்று சாப்பிட்டு, சுடு நீரில் வாய் கொப்பளித்து வந்தால் ஆடும் பல் கூட ஆடாது.(249)

 

06.      மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து சற்று நேரம் கழித்து துப்பிவிட்டால், பல் ஆடுதல் சரியாகி உறுதி பெறும்.  (264) (1417)

 

07.   மாவிலை சூரணம், ஆலம் விழுது சூரணம் ஆகியவைகளுடன் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால், பல் ஆட்டம் நிற்கும். பல் உறுதியாகும்.(265)

 

08.   வாகை மரப் பட்டையைக் கரியாக்கிப் பொடி செய்து, பல்துலக்கி வந்தால், பல் ஆட்டம், பல் வலி, ஈறு நோய்கள் ஆகியவற்றைத் தடுக்கலாம்.(230) (246)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக