மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 4 ஆகஸ்ட், 2021

மாந்தம் (Cromp)

 

01.   உத்தாமணிச் சாற்றில் சிறிதளவு உப்பும், வசம்பு சுட்ட கரியும் சேர்த்து மண் சட்டியில் இட்டுக் காய்ச்ச, உப்பு சுண்டி வெளுத்துப் பொடியாகும். இப்பொடியை சிறிது எடுத்து சிறு குழந்தைகட்கு வரும் மாந்தம், அள்ளு மந்தம், செரியாக் கழிச்சல் முதலிய நோய்களுக்கு, 25 மி.லி வெந்நீரில். கலந்து புகட்ட, நோய் நீங்கும்.

 

02.   ஓமம், மிளகு இரண்டையும் அளவோடு எடுத்து, மண்சட்டியில் போட்டு, வறுத்துக் கொண்டிருக்கும் போது  பேய்மிரட்டி இலைகள் இரண்டை அத்துடன் போட்டு சுண்டக் காய்ச்சி, ஒரு சங்கு அளவு இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்தால், குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் போது ஏற்படும் காசம், மாந்தம் ஆகியவை குணமாகும். (222)

 

03.   சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவை சேர்த்து கசாயம் போட்டு காலை, மாலை குடித்தால்,  மாந்தம் போகும்.

 

04.   நாய்த்துளசி இலைச் சாற்றில் 30 துளிகள் சிறிது பாலுடன் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சல் தீரும். (123)

 

05.   மிளகு, ஓமம் இரண்டையும் மண் சட்டியில் வறுத்துக் கொண்டிருக்கும் போது நீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். அப்போது பேய் மிரட்டி இலைகள் சிலவற்றைப் போட்டு சுண்டக் காய்ச்சி அரைச் சங்கு அளவுக்கு இரண்டு வேளைகள் கொடுத்தால், குழந்தைகளுக்கு வரும் மாந்தம் குணமாகும்.(222)

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )19]

{04-08-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக