01. கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும், கறுப்பாகவும் வளரும்.(909)
02. சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், முடி அடர்த்தியாகவும், நீண்டும் வளரும்.(928)
03. சீயக்காய் ஷாம்பூ:- சீயக்காயை அரைத்த பொடி 200 கிராம், வெந்தயப் பொடி 100
கிராம், நெல்லிக்காய்ப் பொடி
100 கிராம், பூந்திக் கொட்டைப் பொடி 100 கிராம், கறிவேப்பிலை ஒரு
கைப்பிடி, துளசி இலை
ஒரு கைப்பிடி, அனைத்தையும் எடுத்து
வெயிலில் காய வைத்து, நன்கு பொடியாக்கி, காற்றுப் புகாத சீசாவில் அடைத்து வைக்க வேண்டும்.. தலைக்குக் குளிக்கும் போது ஷாம்பூவுக்குப் பதில், இந்தப் பொடியை
இரண்டு தேக்கரண்டி எடுத்து தண்ணீர் சேர்த்துக் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
04. செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால், முடி கறுத்து
அடர்ந்து வளரும்.
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக