மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 செப்டம்பர், 2021

விரை வீக்கம் (Hydrocele)

 

 

01.   ஆண்களுக்கு உண்டாகும் விரை வீக்கம் (Hydrocele) குணமாக நாயுருவி வேர்க் கசாயம்  செய்து ஒரு தேக்கரண்டி தூய்மையான விளக்கெண்ணெய் கலந்து காலையும் இரவும் உணவுக்கு முன் சாப்பிட்டு வர வேண்டும்.

 

02.   இலுப்பைப் பூவை வைத்துக் கட்டினால் விதை வீக்கம் சரியாகிவிடும்.(520)

 

03.   கழற்சி இலைகளைத் தேங்காய்ப் பூ சேர்த்து, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்ளில் வைத்துக் கட்டினால் விதைவீக்கம், ஆண்களின் விரை வாதம் கட்டுக்குள் வரும்

 

04.   தேங்காய் எண்ணெயுடன் தேன் மெழுகு சேர்த்து, தேனும் கலந்து தடவி வந்தால் விதை வீக்கம் குணமாகும். (493)

 

05.   தேங்காய் நன்கு முற்றியதாக ஒன்று எடுத்து, அதைத் துருவி விளக்கெண்னெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் விரை வீக்கம் குணமாகும்.  (1459)

 

06.   மல்லிகைப் பூவை வைத்துக் கட்டி வந்தால்  விதை வீக்கம் சரியாகும். (513) (1490)

 

07.   மாவிலங்க மரப் பட்டை 150 கிராம்,  மூக்கரட்டை 75 கிராம் எடுத்து ஒன்றரை லிட்டர் நீர் விட்டு ,குடிநீர் செய்து, அதில் 50 மி.லி கொடுத்து வந்தால், புரையோடிய நாட்பட்ட புண்கள், விரை  வீக்கம் நீங்கும்.

 

08.   மாவிலங்கப் பட்டை, மூக்கிரட்டை வேர் கசாயம் மூன்று வேளை குடித்து வந்தால் விரை வீக்கம் தீரும்.  (1566)

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]

{02-09-2021}

==========================================================================

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக