மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 செப்டம்பர், 2021

வாய் - குமட்டல் (Nausea)

 

01.  எலுமிச்ச பழச் சாறில் ஊறிய சீரகத்தை உலரத்திப் பொடித்து வைத்துக் கொண்டு, குமட்டல் வரும் போது சுவைத்தால், குமட்டல் நீங்கும்.(288)

 

02.  ஏலக்காய் 15, வால் மிளகு 15, வெற்றிலை 3 ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து  வடிகட்டி மூன்று வேளை பருகினாலும் வாந்தி, குமட்டல் நின்று விடும்.

 

03.  ஏலக்காய், அதிமதுரம், மிளகு சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை வடிகட்டிக் குடித்தால் வாந்தி, குமட்டல் நீங்கும்.

 

04.  சீரகத்தை எலுமிச்சைச் சாறில் ஊறவைத்து, உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு, வாயில் போட்டு அடக்கி உமிழ்நீரை விழுங்கி வந்தால், குமட்டல் தீரும். (288)

 

05.  வெற்றிலைக் காம்பினை மென்று வாயில் அதக்கிக் கொண்டால் குமட்டல் நீங்கும்.  (284) (1918)

 

06.  வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால், குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊறவைத்துக் குடிக்க, உடல் பித்தம் தீரும்.

    

 

===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]

{02-09-2021}

====================================================

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக