மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

விஷக்கடி - தேள்கடி (Scorpion Bite)

 

01.   எலியாமணக்குக் கொழுந்தினை எடுத்து வெற்றிலைக்குள் வைத்துக் கசக்கி, அப்படியே மென்று விழுங்கினால் தேள்கொட்டு விஷம் நீங்கும்.

 

02.   எலுமிச்சம் பழ விதைகளுடன் சிறிது உப்பையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து குடித்தால் தேள் விஷம் நீங்கும்.(898)

 

03.   கிரந்திநாயகம் இலையை மென்று தின்றால் தேள் கொட்டு விஷம் நீங்கும். வலி முற்றிலும் விலகும். (888)

 

04.   தும்பை இலைச் சாறு உட்கொண்டால் தேள், பாம்பு கடி விஷம் முறியும்.(900)

 

05.   தும்பைச் சாறு எடுத்து தேனில் கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் நஞ்சு இறங்கும். கடுப்பு மறையும்.(890)

 

06.   நஞ்சறுப்பான் கொடி இலையை அரைத்துக் கடிவாயில் கட்டி, சிறிதளவு உள்ளுக்கும் சாப்பிட்டால் தேள் கொட்டு நஞ்சு முறியும்.(906)

 

07.   நாயுருவி வேரைப் பச்சையாக மென்று சாறை விழுங்கினால், தேள்கொட்டு வலி சரியாகும். விஷம் நீங்கும்.(875)

 

08.   பிரமத்தண்டு இலைச்சாறு எடுத்துத் தடவினால் தேள் கொட்டிய இடத்தில் கடுப்பு நீங்கும். (904)

 

09.   புரச விதைகளை எருக்கம் பால் ஊற்றி மைய அரைத்துப் தேள் கொட்டிய கடிவாயில் பூசினால் விஷம் நீங்கும். வலி குறையும்.(896)

 

10.   முருங்கைக் கொழுந்து எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மென்று விழுங்கினால், தேள்கொட்டு விஷம் நீங்கும்.

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)18]

{03-09-2021}

==========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக