01. அம்மான் பச்சரிசி பாலைத் தடவிவர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.
02. அறுகம்புல்லை மைய அரைத்து மஞ்சள் தூள் மற்றும் சிறிது சுண்ணாம்பு கலந்து பூசி வந்தால் நகச்சுற்று குணமாகும்.(572)
03. எலுமிச்சம்பழத்தை விரலில் செருகி வைத்தால் நகச்சுற்று விரைவில் குணமாகும்.
04. எருக்கம்பூ 2, நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து மைய அரைத்து சொத்தை நகத்தின் மீது வைத்துக் கட்டினால் சொத்தை
சரியாகும்.(316)
05. கிரந்தி நாயகம் இலையை அரைத்து நகச்சுற்றுக்கு கனமாகப் பற்றுப்போட மூன்று நாட்களில் குணமாகும்.
06. சிலந்தி நாயகம் இலையை அரைத்து நகச் சுற்றுக்குகட்டலாம். நகச்
சுற்றிலிருந்து இரத்தமும் சீழும் வெளியேறி, விரைவில் குணமாகும்.(307)
07. நொச்சி இலை 50 கிராம், மருதாணி
இலை 50 கிராம், எருக்கம்
பூ 2 சேர்த்து மைய
அரைத்து நகத்தின் மீது வைத்துக் கட்டினால், நகச் சுற்று நீங்கும்.
(316) (1948)
08. படிக்காரத்தைப் பொரித்து நீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து சொத்தை நகத்தின் மீது வைத்துக் கட்டினால் நகச் சுற்று குணமாகும். (304)
09. மஞ்சள், அறுகம்புல், சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்து அரைத்து, நகச் சுற்றுக்குப் போட்டு வந்தால் நகச் சுற்று குணமாகும். (572)
10. மருதாணி இலை 50 கிராம், நொச்சி இலை 50 கிராம், எருக்கம் பூ 2 எண்ணிக்கை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, கட்டினால் நகச் சுற்று குணமாகும்.
(316) (1948)
11. மருதாணி இலைகளை அரைத்து சொத்தை நகங்கள் மீது வைத்துக் கட்டி வந்தால் நல்ல நகம் முளைக்கும்.
(1527)
12. விளக்கெண்ணெயுடன் பால் ஏடு சேர்த்துக் குழைத்து வெண்ணெய் போல் ஆக்கி நகத்தைச் சுற்றிலும் போட்டு வந்தால் நகச் சுற்று நீங்கும்.
(312)
===================================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர் .வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில்,
S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
===============================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]
{02-09-2021}
==========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக